வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உருவம் போலி: இணையத்தில் பரவும் போட்டோஸ்!

 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உருவம் போலி: இணையத்தில் பரவும் போட்டோஸ்!

அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. மேலும், அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக பேசப்பட்டது. 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 20 நாட்களுக்கு மேலாக வெளியுலக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். குறிப்பாக ஏப்ரல் 15 ஆம் தேதி வடகொரியா நிறுவனரும், கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவிலும், கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நடைபயிற்சி மேற்கொண்டபோது உடல் நலக்குறை ஏற்பட்டதாகவும், இதனால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. மேலும், அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக பேசப்பட்டது. 

ஆனால், அனைத்து வதந்திகளையும் உடைத்து விட்டு, அண்மையில் வடகொரியாவில் நடந்த நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இதுகுறித்து கூறிய தென்கொரிய உளவு நிறுவனங்கள், கொரோனா தொற்றுக்கு பயந்தே, 20 நாட்களுக்கு மேலாக அவர் வெளியுலகில் நடமாடவில்லை என  தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அண்மையில் வடகொரியாவில் நடந்த நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. அவர் காலந்துகொண்டதாக வந்த புகைப்படங்கள் போலி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் லூயிஸ் மென்ங்க் தனது டிவிட்டர் பக்கத்தில், கிம்மின் இருவேறு புகைப்படத்தை பதிவிட்டு இதிலுள்ள கண் மற்றும் காதுகளை பாருங்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றது கிம் இல்லை என்றும் கூறியுள்ளார்.  இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.