வடகிழக்கு மாநிலங்களிலும் கணக்கைத் தொடங்கியது கொரோனா!

 

வடகிழக்கு மாநிலங்களிலும் கணக்கைத் தொடங்கியது கொரோனா!

மணிப்பூரில் இளம் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர்: மணிப்பூரில் இளம் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வராமல் இருந்தது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாஸிடிவ் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்திலிருந்து திரும்பிய அந்த 23 வயதான பெண்ணுக்கு கொரோனா இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.