வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு

 

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து விட்டது. இனி வடகிழக்கு பருவ மழை தொடங்கும். வருகிற 26-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.வடக்கு அந்தமானில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. மேலும் அது நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும்.

தற்போது தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.