வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள்- பார்த்திபன் சொல்லும் தேர்தல் கணக்கு!

 

வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள்- பார்த்திபன் சொல்லும் தேர்தல் கணக்கு!

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் பரிந்துரை செய்துள்ளார்.

சென்னை: தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் பரிந்துரை செய்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அனல் பறக்கும் இந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. தேர்தல் களத்தில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்து வந்தனர்.

அந்த வகையில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு மூலம் பரிந்துரை செய்துள்ளார் அதில்,’ மாம்பழமோ? மாபெரும் பழமோ?பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு, தேர்தல்=தேத்துதல்(பணம்) வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு…

ஓட்டைப் போடாதீர்கள்
ஓட்டைப் போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப் போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின்
ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப் போடாதீர்கள்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.