வசமாக சிக்கிய தமிழச்சி தங்கபாண்டியன்… அடுத்தடுத்து மாட்டும் திமுக வேட்பாளர்கள்..!

 

வசமாக சிக்கிய தமிழச்சி தங்கபாண்டியன்… அடுத்தடுத்து மாட்டும் திமுக வேட்பாளர்கள்..!

காரில் கட்டு காட்டாக தென் சென்னை பகுதியை சேர்ந்த புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 220 வாக்காளர் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது

துரைமுருகனின் மகனை தொடர்ந்து தென்சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனும் சோதனையில் வசமாக சிக்கியுள்ளார். 

தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து தென் சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயகுமார் மகனும், தற்போதை எம்.பியுமான ஜெயவர்தனன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் இசக்கி சுப்பையா களமிறங்கி இருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில்,  வேலூர் சிமெண்ட் குடோனில் சிக்கிய கட்டு கட்டான பணம் திமுக பொருளாளர் துரைமுருகன் உடையது என கூறப்படுவது திமுகவிற்கு மிக பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழச்சி தங்கபாண்டியனும் சிக்கலில் மாட்டியுள்ளார். 

தமிழச்சி

இன்று மேடவாக்கம் – ஆதம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள் அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் தென் சென்னை பகுதியை சேர்ந்த புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 220 வாக்காளர் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழச்சி

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதனை எடுத்து வந்தவர்கள் திமுகவினர் என்பதும், அதில் திமுக வட்டசெயலாளர் திவாகரனும் ஒருவர் என்பதும், உறுதிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டை எவ்வாறு கிடைத்தது என்றும், கள்ள ஓட்டு போட இதனை அவர்கள் பயன்படுத்த இருந்தார்களா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றபட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.