வசனம் பேசியவர் எல்லாம் முதல்வரா? எம்.எல்.ஏ தனியரசு விளாசல்

 

வசனம் பேசியவர் எல்லாம் முதல்வரா? எம்.எல்.ஏ தனியரசு விளாசல்

யாரோ எழுதி கொடுத்த வசனம், கவிதைகளை பேசியவர்கள் எல்லாம் முதல்வராக ஆசைப்படுவதா? என எம்.எல்.ஏ தனியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: யாரோ எழுதி கொடுத்த வசனம், கவிதைகளை பேசியவர்கள் எல்லாம் முதல்வராக ஆசைப்படுவதா? என எம்.எல்.ஏ தனியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நான் முதல்வரானால் நடிக்கமாட்டேன் உண்மையாக இருப்பேன் என நடிகர் விஜய் பேசியதுதான் தற்போதைய தமிழக அரசியலின் ஹாட் டாபிக். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அரசியல் குறித்து பேசலாம் என்கிற சூழல் இருக்கும் நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலோ, இல்லை அரசியல் குறித்து பேசினாலோ கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ தனியரசு, யாரோ எழுதி கொடுத்த வசனங்களையோ, கவிதைகளையோ பேசியவர்கள் எல்லாம் முதல்வராக ஆசைப்படுவதா? ஏற்கனவே முதல்வர் கனவோடு வந்த ரஜினியும், கமலும் நிற்கதியாய் நிற்கின்றனர். விஜய்யால் வார்டு மெம்பராக கூட ஆக முடியாது என்றார்.