வங்க கடலிலிருந்து அரபிக்கடல் சென்ற மீரா மிதுன் புயல்! தமிழ்நாட்டுக்கு குட் பை…!

 

வங்க கடலிலிருந்து அரபிக்கடல் சென்ற மீரா மிதுன் புயல்! தமிழ்நாட்டுக்கு குட் பை…!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்ச்சை நாயகி மீரா மிதுன் தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்ச்சை நாயகி மீரா மிதுன் தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தா மீரா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னும் தனது வாயால் பலரின் பேரின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.  நம்மவீட்டு பிள்ளைப்படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து அவர் ஒப்பந்தமாகியிருந்த அக்னிச்சிறகுகள் படத்திலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.

Meera

இதனால் தென்னிந்திய திரைத்துறையினரின் மீது கோபம்கொண்ட அவர், கோலிவுட்டை விளாசி ட்வீட் போட்டதுமட்டுமின்றி, தமிழுக்கு டாடா சொல்லிவிட்டு பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். 

 

 

இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடிக்க மும்பை சென்றுள்ள மீரா, அங்கு டெஸ்ட் ஷூட்டில் நடித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மீராவின் நண்பர், அவரது புகைப்படத்துடன், வங்கக் கடல் சுனாமி திறமைக்கு நோ சொன்ன நிலையில் அரபிக்கடல் திறமையை வரவேற்றுள்ளது. மீரா மிதுன் என்ற திறமை சரியான கரையை தாக்கும் என்று பதிவிட்டுள்ளார்.