வங்கிகளின் இணைப்பால் ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள்! 

 

வங்கிகளின் இணைப்பால் ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள்! 

நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை அதிரடியாக இணைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். வங்கிகளின் வாரக்கடன் கடந்த நிதி ஆண்டை விட 7.94 சதவிகிதம் இந்த ஆண்டு குறைந்துள்ளதாகவும், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கியின் ஊழியர்கள் இதனால்  வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை அதிரடியாக இணைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். வங்கிகளின் வாரக்கடன் கடந்த நிதி ஆண்டை விட 7.94 சதவிகிதம் இந்த ஆண்டு குறைந்துள்ளதாகவும், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கியின் ஊழியர்கள் இதனால்  வேலையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

nirmal setharaman

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் எடுக்கும் முடிவில் அரசு நேரிடையாக தலையிடுவதில்லை என்றும் கூறியுள்ளார். வங்கிகளின் சீரான செயல்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வங்கிகள் வராக்கடன் 8.65 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 7.9 லட்சம் கோடி ரூபாயாக கிட்டத்தட்ட 7.94% குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிறு, குறு வங்கிகளுக்காக அறிவிக்கப்பட்ட கடன் சலுகைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், 250 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்கி வருவதாகவும்,நஷ்டத்தில் இயங்குக் பொதுத்துறை வங்கியின் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.