வங்காளதேச கிரிக்கெட் வீரர் சவுமியா சர்கார் திருமணத்தில் செல்போன் திருட்டு

 

வங்காளதேச கிரிக்கெட் வீரர் சவுமியா சர்கார் திருமணத்தில் செல்போன் திருட்டு

வங்காளதேச கிரிக்கெட் வீரர் சவுமியா சர்கார் திருமண விழாவில் செல்போன்கள் திருடு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்கா: வங்காளதேச கிரிக்கெட் வீரர் சவுமியா சர்கார் திருமண விழாவில் செல்போன்கள் திருடு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான சவுமியா சர்கார் 15 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் மூன்று சர்வதேச சதங்களுடன் 3,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இவருக்கு கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திருமணத்திற்கு வந்தவர்களில் சிலருடைய செல்போன்கள் திருடப்பட்டது. சவுமியா சர்காரின் தந்தை செல்போன் உட்பட மொத்தம் 7 செல்போன்கள் திருடப்பட்டன.

ttn

இதையெடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட சில நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் திருமணத்திற்கு வந்த உறவினர்களை தாக்கி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை சரி செய்து  காணாமல் போன செல்போன்களை மீட்டு கொடுத்தனர். இந்த விவகாரத்தில் யாரேனும் கைது செய்யப்பட்டார்களா என்ற விவரம் தெரியவில்லை.