வங்கதேச அணிக்கு 315 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

 

வங்கதேச அணிக்கு 315 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு 315 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு 315 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 49-வது லீக் ஆட்டம் பெர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தினேஷ் கார்த்தி, புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 104 ரன்களும், ராகுல் 77 ரன்களுடனும், பண்ட் 48 மற்றும் தோனி 35, கோலி 26 ரன்களும் எடுத்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் மட்டுமே எடுத்து 315 ரன்களை மட்டுமே வங்க தேச அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.