வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து: 70 பேர் பலி

 

வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து: 70 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 நபர்கள் பலியாகிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Pc: Rehman Asad

தாக்கா: அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 நபர்கள் பலியாகிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசம், தாக்காவில் உள்ள சாவ்க் பஜார் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த குடோனில் தீ பிடித்த பின்னர் வேகமாக பரவியது.  தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வேகமாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரசாயனப் பொருட்களின் மூலம் பரவியதால் தீயை அணைக்க கால தாமதாமனது.

இந்த விபத்தில் 70 பேர் பலியாகிருக்கக் கூடும் என கூறப்படுகிறது. நூற்றுக் கணக்கானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசாயன குடோனில் உள்ள கேஸ் சிலிண்டரில் தீப்பற்றி, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.