வக்கிர எண்ணம் படைத்த மாஃபா வாழ்க! போராட்டத்தை கைவிட ஸ்டாலின் அறிவுறுத்தல்!! 

 

வக்கிர எண்ணம் படைத்த மாஃபா வாழ்க! போராட்டத்தை கைவிட ஸ்டாலின் அறிவுறுத்தல்!! 

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன் திருத்தி எழுத மாஃபா பாண்டியராஜன் எத்தனிக்கிறார். 

mk stalin

அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. ஏனென்றால், கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்.

அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம். அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டமன்ற ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் அவர்களால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவு கொள்ளலாம் 

mk stalin

தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்துகொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் நாட்டு மக்களுக்கு தோலுரித்துக் காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.