வகுப்பில் மயங்கிய மாணவி ! 3 மாதத்தில் தாயாகப் போகும் சிறுமி !

 

வகுப்பில் மயங்கிய மாணவி ! 3 மாதத்தில் தாயாகப் போகும் சிறுமி !

புதுச்சேரியில் பள்ளி ஒன்றில் மயங்கி விழுந்த மாணவியை பரிசோதனை செய்தபோது அவ கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரியில் பள்ளி ஒன்றில் மயங்கி விழுந்த மாணவியை பரிசோதனை செய்தபோது அவ கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த தம்பதி ஒருவரின் மகள் புதுச்சேரியில் விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவரை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த சிறுமி 7 மாதமாக கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Student

இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவியிடம் இதுகுறித்து கேட்டபோது விடுமுறைக்காக நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்று பெற்றோர் வீட்டில் இருந்தபோது 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். பின்னர் போலிசுக்கு தகவல் அளிக்க சிறுமி கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் போலீசார் , சூர்யா, ரூபன் காரல் மார்க்ஸ், கோகுல், வீரையன், தாஸ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Student

மாணவியின் பெற்றோர் கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர்கள். இவர்கள் வேளாங்கண்ணியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விடுமுறைக்கு சிறுமி சென்றபோது பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவதால் வீட்டில் தனியாக இருந்தபோது சூர்யா  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Rape

மேலும் இதுகுறித்து சூர்யா நண்பர்களுக்கு தெரிவிக்க அவர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரம் பக்கத்து வீட்டில் இருக்கும் தாஸ் என்பவருக்கு தெரியவர அவரும் மகள் வயதில் இருக்கும் சிறுமியை சீரழித்துள்ளார். மாணவியை ஒரு மாதமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அழைத்து 5 பேரும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.