வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி! 

 

வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி! 

வேலூர் அருகே பள்ளிக்கு சென்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் அருகே பள்ளிக்கு சென்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லத்தேரி பகுதியை சேர்ந்த நந்தகுமாரின் மகள் நிவேதினி. இவர் அதே பகுதியிலுள்ள  தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிவேதினி, மாலை திடீரென வகுப்பறை மேசையிலேயே மயங்கி விழுந்துள்ளார். தகவலறிந்து சென்ற ஆசிரியர்கள் நிவேதினியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. ஆனால் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

student

வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், மாணவி மயங்கி விழுந்த காட்சி பதிவாகியிருக்கும் நிலையில் நிவேதினியின் இறப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே நிவேதினியின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.