வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை!

 

வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை!

சென்னையில் தான் பணியாற்றிய கல்லூரியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் தான் பணியாற்றிய கல்லூரியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரி சாந்தி (32). சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் தெலுங்கு பிரிவில் உதவி விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். அதன்பின் அவருக்கு அரசு வேலை கிடைத்து பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். 

ஆசிரியர்

இந்நிலையில் தன்னுடைய பழைய நண்பர்களை பார்ப்பதற்காக டிஜி வைஷ்ணவா கல்லூரிக்கு வந்த சாந்தி, தான் பணியாற்றிய தெலுங்கு பிரிவு வகுப்பறைக்கு சென்றுள்ளார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை தெலுங்கு பிரிவு துறைத் தலைவர் நட்ராஜ் வகுப்பறையை திறந்து பார்க்கும் போது ஹரி சாந்தி தூக்கில் தொங்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் கொண்டு வந்த கைப்பை, செல்போன் ஆகியவை வகுப்பறையில் இருந்துள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல்துறையினர் ஆசிரியரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவில்லை.