லோக் அயுக்தா அமைப்பதில் என்ன பயம்? அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
லோக் ஆயுக்தா அமைத்தால் தமிழக அமைச்சர்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என அதிமுக அரசு அச்சப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: லோக் ஆயுக்தா அமைத்தால் தமிழக அமைச்சர்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என அதிமுக அரசு அச்சப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதமே தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை அமைக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு விருப்பமில்லையா? என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்புகிறது.
#Lokayukta அமைக்க தமிழக அரசுக்கு விருப்பமில்லையா? – உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி!
ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட அமைப்புக்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பதிலிருந்தே தெரிகிறது தமிழக அரசின் ஆர்வம்!
ஒருவேளை அமைத்தால், கேபினட் முழுவதுமே சிறைக்குப் போக வேண்டிவரும் என்ற அச்சமோ? pic.twitter.com/szsGaV0TTS
— M.K.Stalin (@mkstalin) October 24, 2018
ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட அமைப்புக்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பதிலிருந்தே தெரிகிறது தமிழக அரசின் ஆர்வம்!
ஒருவேளை அமைத்தால், கேபினட் முழுவதுமே சிறைக்குப் போக வேண்டிவரும் என்ற அச்சமோ?” என பதிவிட்டுள்ளார்.