லெஸ்பியன் ஜோடிக்கு லண்டன் பேருந்தில் நடந்த கொடுமை!

 

லெஸ்பியன் ஜோடிக்கு லண்டன் பேருந்தில் நடந்த கொடுமை!

மெலனியாவும் அவருடைய தோழியும் இந்தக்கும்பலை சாந்தப்படுத்த எவ்வளவோ முயன்றிருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த அந்த கும்பல், இருவரையும் சகட்டுமேனிக்கு முகத்தில் கையால் குத்தியிருக்கிறார்கள். இருவரின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து நிறுத்தப்படவும், அந்த நான்கு பேர் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

லண்டன் மாடிபேருந்தில் தன் காதலியுடன் இரவு 2.30 மணியளவில் பயணம் செய்துகொண்டிருந்தார் மெலனியா என்ற பெண்மணி. இருவரும் ஒரு கிளப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்கும்போது அதில் ஏறிய 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, மெலனியாவையும் அவருடைய லெஸ்பியன் நண்பரையும் பார்த்து வம்பிழுக்க தொடங்கி இருக்கிறது. தங்களுக்கு முன்பாக இருவரையும் முத்தமிட்டுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும், அவர்கள்மீது சில்லறை காசுகளை வீசியெறிந்தும் தொந்தரவு படுத்தியுள்ளனர்.

Women attacked in Bus

மெலனியாவும் அவருடைய தோழியும் இந்தக்கும்பலை சாந்தப்படுத்த எவ்வளவோ முயன்றிருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த அந்த கும்பல், இருவரையும் சகட்டுமேனிக்கு முகத்தில் கையால் குத்தியிருக்கிறார்கள். இருவரின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து நிறுத்தப்படவும், அந்த நான்கு பேர் கும்பல் தப்பி ஓடிவிட்டது. உடனடியாக காவல்துறையினர் இருவரையும் அருகிலிருந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தி பின்னர் பத்திரமாக வீடு சேர்த்துள்ளனர். இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள லண்டன் மேயர் “ஓரின சேர்க்கையாளர்களை கேவலப்படுத்துவது அவமானத்துக்குரிய செயல்” என கண்டனம் தெரிவித்துள்ளார். கும்பலுக்கு போலீஸ் வலைவீசப்பட்டுள்ளது.