‘லுங்கியை விரித்து நடுரோட்டில் ஹாயாக படுத்துத் தூங்கிய நபர்’.. போதையில் குடிமகன் செய்த கலாட்டா!

 

‘லுங்கியை விரித்து நடுரோட்டில் ஹாயாக படுத்துத் தூங்கிய நபர்’.. போதையில் குடிமகன் செய்த கலாட்டா!

சில நேரத்தில் அதனைப் பார்க்க சிரிப்பு வந்தாலும், பல தடவை அது மக்களுக்கு இடையூறாகவே இருக்கும்.

மதுபோதையில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம்.. என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உளறி கொண்டிருப்பார்கள். சில நேரத்தில் அதனைப் பார்க்க சிரிப்பு வந்தாலும், பல தடவை அது மக்களுக்கு இடையூறாகவே இருக்கும். இதே போலத் தேனியில் ஒரு குடிமகன் நடுரோட்டில் படுத்து உறங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். 

ttn

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு மதுக் கடைகள் இருப்பதால், பொதுமக்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது என்று புகார் கொடுத்துள்ளனர். நேற்று அந்த மதுக்கடையில் இருந்து வெளியே வந்த நபர் தான் போட்டுக் கொண்டிருந்த லுங்கியை கழட்டி தரையில் விரித்து நடுரோட்டிலேயே ஹாயாக படுத்துத் தூங்கியுள்ளார். பொது மக்கள் எழுப்பி அவரை சாலையோரம் படுக்க வைத்தாலும், மீண்டும் வந்து அதே இடத்தில் படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து அங்குச் சென்ற போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், எதுவும் சரிப்பட்டு வரவில்லையாம். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப் பட்டுள்ளனர்.