“லீவுக்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட சிறுமிகளை அனுப்ப முடியலே “விருந்தாளி வீட்ல நடந்த கொடுமைய பாருங்க …

 

“லீவுக்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு கூட சிறுமிகளை அனுப்ப முடியலே “விருந்தாளி வீட்ல நடந்த கொடுமைய பாருங்க …

உ.பி .யின்  லியாரியின் தர்யாபாத் பகுதியில்  ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவர், தனது நான்கு வயது மகளை தனது சகோதரரின் வீட்டிற்கு விடுமுறைக்கு அனுப்பியிருந்தார். சம்பவத்தன்று காலையில்   அவரின் மகள் மயக்கமடைந்துள்ளதாக சகோதரரிடமிருந்து  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் உடனே தனது சகோதரரின் வீட்டிற்குச் சென்று, தனது  மகளை  ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

உ.பி .யின் லியாரி பகுதியில் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்ததாக உறவினர் ஒருவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

உ.பி .யின்  லியாரியின் தர்யாபாத் பகுதியில்  ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவர், தனது நான்கு வயது மகளை தனது சகோதரரின் வீட்டிற்கு விடுமுறைக்கு அனுப்பியிருந்தார். சம்பவத்தன்று காலையில் அவரின் மகள் மயக்கமடைந்துள்ளதாக சகோதரரிடமிருந்து  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் உடனே தனது சகோதரரின் வீட்டிற்குச் சென்று, தனது  மகளை  ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை  உறுதிப்படுத்தினர்.

arrest

இது பற்றி சிறுமியிடம் விசாரித்தபோது அவர், தன்னை பலாத்காரம் செய்த உறவினர் இந்த விஷயத்தை குடும்பத்தாரிடமோ வேறு யாரிடமோ கூறக்கூடாதென மிரட்டியதாக கூறினார்.

அவர்களின்  புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.