லீக்கான வீடியோவால், மனதளவில் பாதிக்க பட்டேன்: புலம்பும் லட்சுமி மேனன்!
தன்னைப் பற்றிய பொய்யான வீடியோ இணையத்தில் பரவிய போது ஏற்பட்ட அனுபவம் பற்றி நடிகை லக்ஷ்மி மேனன் கூறியுள்ளார்.
சென்னை: தன்னைப் பற்றிய பொய்யான வீடியோ இணையத்தில் பரவிய போது ஏற்பட்ட அனுபவம் பற்றி நடிகை லக்ஷ்மி மேனன் கூறியுள்ளார்.
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி ஆனவர் நடிகை லக்ஷ்மி மேனன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பல ஹிட் படங்களில் நடித்தவர்,பின்பு படம் வாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.
இவர் நடிகர் பிரபு தேவாவுடன் யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவின் ரசிகர்களின் கவனத்தைப் பெறுவாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், உங்கள் மனதை பாதித்த சம்பவம் எதாவது இருக்க என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது, ‘ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து, எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டு வர எனக்குப் பல நாட்கள் தேவைப்பட்டது.
அந்த சமயத்தில் என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. மனதளவில் ரொம்ப அவதிப்பட்டேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டேன். இப்போது, நான் என் வேலைகளில் கவனமாக இருக்கிறேன். அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக்கணும்னு நினைக்கும் போது தான் பிரச்சினை வரும். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான்.எதையும் நான் பெருசா எடுத்துக்கொள்ளமாட்டேன். எப்போவும் சந்தோஷமா இருக்கணும், நம்மளைச் சுத்தி இருக்கிறவர்களையும் சந்தோஷமா வெச்சுக்கணும்’ என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சாதி ஒடுக்குமுறையை எதிர்ப்பவன்; அநாகரீக வார்த்தைகளுக்கு உடன்பட்டவன் இல்லை: இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்!