‘லாஸ்லியா கன்னத்தை பிடிச்சி தேய்கிறது எனக்கு பிடிக்கல’ : பாத்திமா பாபு ஓபன் டாக்!

 

‘லாஸ்லியா கன்னத்தை பிடிச்சி தேய்கிறது எனக்கு பிடிக்கல’ :  பாத்திமா பாபு ஓபன் டாக்!

லாஸ்லியாவை சேரன் தொடுவது தனக்கு பிடிக்கவில்லை என்று பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டவர்  பாத்திமா பாபு.  பிக் பாஸ் போட்டியில்  மிகவும் பாசமானவராகப் பார்க்கப்பட்ட பாத்திமா பாபு, டிஆர்பியை உயர்த்த எந்த விதத்திலும் உபயோகப்படவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எலிமினேஷன் செய்யப்பட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பாத்திமா பாபு, வனிதாவை கடுமையாக விமர்சித்தார்.

fathima

இந்நிலையில் போட்டிலிருந்து வெளியேறிய பாத்திமா பாபு பிரபல இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், வனிதா  பற்றி கேட்டபோது , ‘திமிர்பிடித்தவள், முட்டாள் பெண். அவர் யார் சொல்லுறதையும் கேட்குற மனநிலையில் இல்லை. நான் பலமுறை முயற்சி செய்துள்ளேன். அவருடைய போக்கை அவர் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அவர் எதிர்பார்ப்பது கிடைக்காது. அப்படி இல்லையென்றால் அந்த கடவுளே  வந்தாலும் அவரை காப்பாற்ற முடியாது’ என்றார். 

losliya

இதையடுத்து சேரன் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘உங்க பொண்ணாவே இருந்தாலும் லாஸ்லியாவை  ஃபிசிக்கலா  தொடாதீங்க சேரன். பொண்ணாவே இருந்தாலும் இவ்ளோ தான் தொடணும்னு இருக்கு. கன்னத்தை  பிடிச்சு அழுத்தி தேய்கிறது  எனக்கு பிடிக்கல. நீங்க அப்பாவாவே பண்ணாலும் எனக்கு அதெல்லாம் பார்க்கவே சகிக்கல’ என்று கூறியுள்ளார். பாத்திமா பாபுவின் இந்த கருத்து சேரனின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.