லாரி மோதி விபத்து; சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி

 

லாரி மோதி விபத்து; சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி

ஆந்திரபிரதேச மாநிலம் கர்னூலில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா: ஆந்திரபிரதேச மாநிலம் கர்னூலில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர்கள் ஷேக் காஜா – பாத்திமா தம்பதி.இவர்களது குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக தங்களது உறவினர்கள் 21 பேருடன் 3 லோடு ஆட்டோவில் கர்னூல் அருகேயுள்ள எல்லாத்தி தர்காவுக்கு இன்று அதிகாலை சென்றனர்.

அப்போது கர்னூல் அருகே அவர்கள் சென்ற போது ஒரு ஆட்டோ திடீரென பழுதானது. ஆட்டோவை டிரைவர் சரி செய்து கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்தவர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் ஆசிப், அப்சரா, மெஜித் என்ற சிறுவர்கள் உள்ளிட்ட  6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த கர்னூல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய லாரியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.