லாரி மோதி இளம்பெண் பலி…சென்னை வேளச்சேரியில் நடந்த பயங்கரம்!

 

லாரி மோதி இளம்பெண் பலி…சென்னை வேளச்சேரியில் நடந்த பயங்கரம்!

மார்பு பகுதிகளில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சென்னை  ஆலந்தூரை சேர்ந்தவர்  ஷெர்லி மடோனா. 22 வயதான  இவர் சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் பிரதான சாலையில்  நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது  அவ்வழியே வந்த லாரி ஒன்று ஷெர்லி மீது மோதியுள்ளது. இதில் தலை, மார்பு பகுதிகளில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ttn

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அப்பெண் பரிதாபமாகப் பலியாகியுள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த   கிண்டி போக்குவரத்து போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.