லாரி ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு.. ஓடும் லாரியில் ஏறி உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் !

 

லாரி ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு.. ஓடும் லாரியில் ஏறி உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் !

கொஞ்சம் நேரம் நேரெதிரே வந்து கொண்டிருந்த லாரி திடீரென பின்னோக்கி செல்வதைச்  சண்முகம் பார்த்துள்ளார்.

ரயில்வே துறையில் காவலராக வேலை பார்த்து வருபவர் சண்முகம். இவர் நேற்று தனது குடும்பத்துடன் சேலம், ஓமலூர் தாலுக்கா அலுவலகம் அருகேயுள்ள மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த மேம்பாலம் அருகே லாரி ஒன்று எதிரே வந்து கொண்டிருந்துள்ளது. கொஞ்சம் நேரம் நேரெதிரே வந்து கொண்டிருந்த லாரி திடீரென பின்னோக்கி செல்வதைச்  சண்முகம் பார்த்துள்ளார். அப்போது, அந்த லாரி ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டு லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. 

ttn

இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் உடனே, தனது காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி, ஓடிக் கொண்டிருந்த லாரியில் ஏறி லாரியை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர், அந்த லாரி டிரைவரின் உயிரைக் காப்பாற்றிய  சண்முகம் அவரை  108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த லாரியின் பின்னால் வாகனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.