லாரியை முந்திச் சென்ற இளைஞர்களுக்குக் கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த சோகம் !

 

லாரியை முந்திச் சென்ற இளைஞர்களுக்குக் கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த சோகம் !

கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலும் கனரக வாகனங்கள் செல்வதால் டிரைவர்கள் இளைப்பாறுவதற்காக அங்கே லாரிகளை நிறுத்தி வைப்பது வழக்கமானது தான்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலும் கனரக வாகனங்கள் செல்வதால் டிரைவர்கள் இளைப்பாறுவதற்காக அங்கே லாரிகளை நிறுத்தி வைப்பது வழக்கமானது தான். இன்று அந்த வழியே வந்த ஒரு லாரியை முந்திக் கொண்டு இளைஞர்கள் இரண்டு பேர் பைக்கில் வேகமாக வந்துள்ளனர். வந்த வேகத்தில் அவர்கள் நிலை தடுமாறி சாலையில் நிறுத்தப் பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளனர். இதில் அந்த இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

ttn

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பைக்கில் வந்த ஒரு இளைஞரின் பெயர் திருமூர்த்தி என்றும் அவர் ஓசூரை சேர்ந்தவர் என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும், மற்றொரு நபரின் விவரங்கள் ஏதும் தெரிய வராததால் அதனைப் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.