லாரியுடன் பேருந்து மோதி விபத்து – 8 பேர் பலி
உத்திரபிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் :
உத்திரபிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலையில் விபத்து
உத்தரபிரதேச மாநிலம் ஆரையாவில் இருந்து நொய்டா நோக்கி, தனியார் இரண்டடுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், கரோலி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கு சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோதியதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
8 பேர் பலி
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், குழந்தை, பெண் உட்பட 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். இது பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆறு வருடங்களில் 705 பேர் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு – 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை