லாரியின் மீது பேருந்து மோதி விபத்து : தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநரின் அஜாக்கிரதை..!

 

லாரியின் மீது பேருந்து மோதி விபத்து : தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநரின் அஜாக்கிரதை..!

நெல்லூரில் இருந்து வந்த அரசுப் பேருந்து லாரியின் பின்னால் சென்று கொண்டிருந்த போது , தாதான்குப்பம் அருகே திடீரென லாரியின் மீது மோதியுள்ளது.

சென்னை பாடி அருகே, பாடியை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று  சென்றுள்ளது. நெல்லூரில் இருந்து வந்த அரசுப் பேருந்து லாரியின் பின்னால் சென்று கொண்டிருந்த போது , தாதான்குப்பம் அருகே திடீரென லாரியின் மீது மோதியுள்ளது. இதில், பேருந்தின் முன்னால் நின்று கொண்டிருந்த பேருந்தின் நடத்துநருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடனே நடத்துநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே நடத்துனர் உயிரிழந்துள்ளார்.

Accident

மேலும், பேருந்தில் பயணம் செய்த 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தவுடன், பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். 

Bus

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தூக்கக் கலக்கத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற  ஓட்டுநர் லாரியின் மீது மோதி விட்டதாகவும், அதனால் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும்,  இந்த விபத்தில், லாரி ஓட்டுநரின் மீது எந்த தவறும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், தப்பியோடிய நடத்துநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.