லாபமோ நஷ்டமோ; நானே முழு பொறுப்பையும் ஏற்கிறேன்: விஜய் தேவரகொண்டா!

 

லாபமோ நஷ்டமோ; நானே முழு பொறுப்பையும் ஏற்கிறேன்: விஜய் தேவரகொண்டா!

’அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான ‘நோட்டா’ திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

ஹைதராபாத்: ’அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான ‘நோட்டா’ திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமான ‘நோட்டா’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு உன் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ‘ரவுடி’ விஜய் தேவரகொண்டா, ’நோட்டா’ படத்தை எனக்காக பார்த்து ரசித்தவர்களுக்கு நன்றி. நோட்டாவுக்காக நான் பெருமைக் கொள்கிறேன். எனக்கு மனதில்பட்டதை, சொல்ல நினைத்ததை படமாக அளித்துள்ளேன். இதற்காக நான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை. படத்துக்கான ஏமாற்றங்களை முழுவதுமாக நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் கூறிய விமர்சனங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். மீண்டும் நான் வருவேன்’ என்று கூறியுள்ளார்.

பொதுவாகவே திரைக்கு வரும் பெரும்பாலான திரைப்படங்களை பிளாக் பஸ்டர், சூப்பர் ஹிட், மக்கள் கொண்டாடும் வெற்றி போன்று கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்களுக்கே இதுபோன்று விளம்பரம் செய்யப்படும் நிலையில், வெளிப்படையாக தனது தோல்வியை ஒப்புக் கொண்டு ரசிகர்களிடத்தில் பேசிய விஜய் தேவரகொண்டாவை அவரது ரசிகர்கள் பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.