லாக்டவுன் விதிமுறைகளை மீறி வெளியே வந்தவர்களுக்கு மாலை போட்ட பஞ்சாப் போலீசார்…

 

லாக்டவுன் விதிமுறைகளை மீறி வெளியே வந்தவர்களுக்கு மாலை போட்ட பஞ்சாப் போலீசார்…

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் லாக்டவுன் விதிமுறைகளை மீறி வெளியே வந்தவர்களுக்கு மாலையிட்டு மற்றும் வீட்டிலேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 3வது முறையாக லாக்டவுனை மே 17ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், வெளியே வரும் போது மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

லாக்டவுன் விதிமுறைகளை மீறிய நபருக்கு மாலை போட்ட லூதியானா போலீசார்
ஆனால் வீட்டுக்குள் இருக்காமல் பலர் வெளியே தேவையில்லாமல் வருகின்றனர். இது கொரோனா வைரஸ் மேலும் பரவுவதற்கு வழி செய்து விடுகிறது. வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரும் மக்களை போலீசார் தங்களது பாணியில் கவனித்து வருகின்றனர். அபராதம், வண்டி பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் பல மாநிலங்களில் வீட்டை வெளியே வருபவர்களை வித்தியாசமான முறையில் போலீசார் கையாண்டு வருகின்றனர்.

லாக்டவுன் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மாலை போட்ட லூதியானா போலீசார்

பஞ்சாபில் லாக்டவுனை மீறி வெளியே வந்தவர்களை அம்மாநில போலீசார் தனித்துவமான முறையில் கையாண்ட சம்பவம் தற்போது பரபரப்பாகி உள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நேற்று கோவிட்-19 லாக்டவுன் விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களை நிறுத்தி அந்நகர போலீசார் மாலையிட்டனர் மற்றும் கைகூப்பி வீட்டிலேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். லூதியானா போலீசாரின் இந்த தனித்துவமான நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் சம்பந்தபட்ட நபர்கள் வெட்கப்பட்டு அடுத்த முறை இது போன்ற தவறை செய்யமாட்டார்கள். அண்மையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் அதிகாலையில் வாக்கிங் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தவர்களை தடுத்து  நிறுத்தி அந்நகர போலீசார் ஆரத்தி எடுத்தது குறிப்பிடத்தக்கது.