’லாக்டவுன்’ நம்மை ‘நாக்டவுன்’ செய்யவில்லை! விரைவில் மாஸ்டர் வருவார்…

 

’லாக்டவுன்’ நம்மை ‘நாக்டவுன்’ செய்யவில்லை! விரைவில் மாஸ்டர் வருவார்…

மாஸ்டர் படக்குபிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

மாஸ்டர் படக்குபிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது.  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 15 ஆம் தேதி பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது.

மாஸ்டர் படம் இன்று ரீலிசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் பட ரிலீஸ் தள்ளிப்போகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக, படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், “Lockdown” நம்மளை “Knock down” செய்யவில்லை,,,! விரைவில் “மாஸ்டர்” வருகிறார்…! என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளத்தை அதகளப்படுத்திவருகின்றனர். 

 

 

இதுகுறித்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நீங்கள் எப்படி எங்களை காணமுடியாமல் வருந்துகிறீர்களோ? அதேபோல, நாங்கள் உங்களை காணமுடியாமல் வருந்துகிறோம்..

ஆய்வாளர்கள் மாற்று மருந்து கண்டுபிடித்து கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்று நம்புகிறோம்..நாங்கள், மிகவும் வலுவாக மீண்டும் வருவோம் நண்பா..வீட்டில் இருங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.ஊரடங்கு உங்களது உத்வேகத்தை இழக்கச் செய்யக்கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்.” என்று தெரிவித்துள்ளது.