லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தூக்கிட்டு தற்கொலை!
காமராஜர் அரங்கத்தில் இசை கச்சேரி நடத்தி கொண்டிருந்தார். அப்போது பாதியிலேயே ராமன் வீட்டிற்கு சென்றதாகத் தெரிகிறது.
இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இசைக்கச்சேரி நிறுவனம் லஷ்மன் ஸ்ருதி. இதன் உரிமையாளர் ராமன். ஆயிரக்கணக்கான மேடைகளில் இசைக் கச்சேரி நடத்தி வந்த இவர் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் இசை கச்சேரி நடத்தி கொண்டிருந்தார். அப்போது பாதியிலேயே ராமன் வீட்டிற்கு சென்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ராமன் நேற்றிரவு அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ராமன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.