லலிதா ஜுவல்லரி நகை கொள்ளையில் அதிரடி திருப்பம் : சிக்கிய கொள்ளையன்!

 

லலிதா ஜுவல்லரி நகை கொள்ளையில் அதிரடி திருப்பம் : சிக்கிய கொள்ளையன்!

 வாகன தணிக்கையின் போது திருவாரூரில் 5 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார்.

திருச்சி : திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த  கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய  கொள்ளையன் பிடிபட்டான்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரபல நகை கடையான லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள  நகைகள் கொள்ளை போனது.  இந்த விவகாரம் குறித்து போலீசார்  7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.  கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தவர்களை  சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில்  புதுக்கோட்டையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த வடமாநிலத்தவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

lalitha

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர்  வாகன தணிக்கையின் போது திருவாரூரில் 5 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார். அவர் வைத்திருந்த நகைகளில் லலிதா  ஜுவல்லரி குறிப்பிட்டிருந்த பார் குறியீடு இருந்ததால் அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சீராத்தோப்பு சுரேஷை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.  சுரேஷின் உறவினர்  முருகன் பிரபலமான கொள்ளையன் என்பதும் இவர் மணிகண்டனின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.  

jewel

இதுகுறித்து கூறியுள்ள மணிகண்டன், கொள்ளையடித்ததில் தன் பங்கை வாங்கிக் கொண்டு வந்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது திருவாரூர் போலீசார் மணிகண்டனை விசாரித்து வரும் நிலையில் திருச்சி போலீசார் திருவாரூர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.