லலிதா ஜுவல்லரியில் 50 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்!

 

லலிதா ஜுவல்லரியில்  50 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகை கடையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருச்சி : திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகை கடையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரபல நகை கடையான லலிதா ஜுவல்லரி அமைந்துள்ளது.  இங்கு இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் வந்து கடையை திறந்துள்ளனர். அப்போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்தனர்.

jewel

கொள்ளையர்கள்  பின்பக்க சுவர் வழியாகத் துளையிட்டு  வந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. கொள்ளைபோல் நகைகளின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. அதன் படி தோராயமாக 50 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, அங்குள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.