லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது பேஸ்புக் நிறுவனம்

 

லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது.

லண்டன்: பேஸ்புக் நிறுவனம் லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது.

கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

facebook

மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பேஸ்புக் நிறுவனம் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் லண்டன் மற்றும் சிங்கப்பூர் அலுவலகங்களை தற்காலிகமாக மூடியது. இவ்விரு அலுவலகங்களிலும் கொரோனா வைரஸ் பாதித்த ஒரு ஊழியர் பணிபுரிந்து வந்ததால் பாதுகாப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ளது.