லண்டன் சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி!

 

லண்டன் சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி!

இங்கிலாந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் தரத்தின் மேம்பாடுகளைத் தமிழகத்தில் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

லண்டன்: வெளிநாடு சுற்றுப் பயணம் செய்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் சென்றடைந்தார். 

edappadi

முதல்வர் பழனிசாமி வெளிநாட்டுப் பயணமாக  லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார்.இதில்  முதற்கட்டாக துபாய் வழியாக லண்டன் சென்றடைந்தார். தாஜ் ஓட்டலில் தங்கியுள்ள அவர், லண்டன் சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகிறார். இங்கிலாந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் தரத்தின் மேம்பாடுகளைத் தமிழகத்தில் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

edappadi

இதையடுத்து இங்கிலாந்து அவசர ஊர்தியை பார்வையிடும் அவர் மலேரியா உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் கொசுக்களைக் கட்டுப்படுத்துவது, நோய்களை தடுக்கும் வழிமுறை அடங்கிய அறிக்கையிலும் கையெழுத்திடுகிறார்.  மேலும்  லண்டன் கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தனது கிளைகளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. அதனைத் தொடர்ந்து, அசோக் லேலண்ட் தலைவர் இந்துஜா உள்ளிட்ட தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.