லண்டனை போன்று இனி தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை – முதலமைச்சர் பழனிசாமி

 

லண்டனை போன்று இனி தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை – முதலமைச்சர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குப் பயணமாக மேற்கொண்டுள்ளார் . புதிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று லண்டனில் பல முக்கிய தலைவர்களை சந்தித்துவருகிறார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குப் பயணமாக மேற்கொண்டுள்ளார் . புதிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று லண்டனில் பல முக்கிய தலைவர்களை சந்தித்துவருகிறார்.  சுகாதாரத் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார். 

Eps

அந்தவகையில் இன்று தமிழகத்தில் நகர் உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்து பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்துவிளங்குவதாக, அந்நாட்டு அமைச்சர்களிடம் எடுத்துறைத்தார், 
 
லண்டனில் செயல்படுத்தப்பட்டுவரும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, இத்திட்டம் தமிழகத்திலும் விரைவில் செயல்படுத்தப்படும் என கூறினார்.