லண்டனில் மீண்டும் இணைந்த பாகுபலி டீம் !

 

லண்டனில் மீண்டும் இணைந்த பாகுபலி டீம் !

பாகுபலி படக்குழு மீண்டும் ஒன்றாக இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது. 

பாகுபலி படக்குழு மீண்டும் ஒன்றாக இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது. 

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான  ‘பாகுபலி’ திரைப்படம் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்தது.

bahubali

பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.  பாகுபலி இந்தியாவைத் தாண்டி  உலகளவில் சாதனை படைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

 

இந்நிலையில் பாகுபலி படக்குழு மீண்டும் இணைந்துள்ளது. ஆனால்  இந்த முறை படத்திற்காக அல்ல. ஆம் லண்டனில் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா சார்பில்  ராயல் ஆல்பர்ட் ஹாலில் இன்று 
 நடைபெறவுள்ள எம்.எம்.கீரவாணியின் லைவ் ஷோ கலந்து கொள்ளவே பாகுபலி படக்குழு லண்டனில் முகாமிட்டுள்ளது. இதற்கான புகைப்படத்தை நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.