லடாக் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

 

லடாக் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர்  மோடி

ஜம்மு காஷ்மீரில் லடாக் வட்டாரத்தில் முதல் பல்கலைக்கழகத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் லடாக் வட்டாரத்தில் முதல் பல்கலைக்கழகத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது லடாக் நகரில் முதல் பல்கலைக்கழகம் அமைப்பதற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதன்பின் பேசிய மோடி, பிலாஸ்பூர் – மணாலி – லே ரயில்பாதை பணி முடிக்கப்பட்டால், டெல்லியுடன் லே, லடாக் பகுதிகளுக்குப் போக்குவரத்துத் தொடர்பு அதிகமாகும். 

இதையடுத்து விஜய்பூர், அவந்திப்போரா ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுதல், கிஸ்த்துவாரில் 624மெகாவாட் நீர் மின் நிலையம் அமைத்தல், ஜம்முவில் இந்திய மக்கள் தொடர்பு மையத்தின் மண்டல மையம் அமைத்தல், சஜ்வாலில் சீனாப் ஆற்றில் பாலம் கட்டுதல், குப்வாரா, பாரமுல்லா, கிஸ்த்துவார் ஆகிய இடங்களில் 3 கல்லூரிகள் கட்டுதல் ஆகியவற்றுக்குப் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி அப்பகுதிகளில் செல்பேசி இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.