லஞ்சம் வாங்கும் ஜால்ரா அதிகாரிகளால் உயிரிழந்த 23 வயசு பெண்!

 

லஞ்சம் வாங்கும் ஜால்ரா அதிகாரிகளால் உயிரிழந்த 23 வயசு பெண்!

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நம்முடைய சட்டம். ஆனால், எல்லா பெட்டிக் கடைகளிலும் சிகரெட்களை விற்கலாம். குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது.. மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு. ஆனாலும் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் குடித்து விட்டு வருகிற குடிமகன்கள் கடை வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் டூவீலர்களில் பந்தாவாக ஏறிச் செல்வார்கள். காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்கள் கண்டுக் கொள்ள மாட்டார்கள்.

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நம்முடைய சட்டம். ஆனால், எல்லா பெட்டிக் கடைகளிலும் சிகரெட்களை விற்கலாம். குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது.. மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு. ஆனாலும் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் குடித்து விட்டு வருகிற குடிமகன்கள் கடை வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் டூவீலர்களில் பந்தாவாக ஏறிச் செல்வார்கள். காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்கள் கண்டுக் கொள்ள மாட்டார்கள்.இரண்டு தெரு தள்ளி அதே வாகனத்தை மடக்கிப் பிடித்து வசூல் வேட்டை நிகழ்த்துவார்கள்… சாயங்காலம் 5  மணி வரைக்கும் கூட எந்த அரசு அலுவலகமும் இயங்காத, அரசு ஊழியர்கள் பணிபுரியாத நிலையில், பத்திரபதிவு அலுவலகங்கள் மட்டும் ராத்திரி 9 மணி வரையில் வளர்பிறை முகூர்த்த நாட்களில் ஓவர் ஒட்டுமொத்தமாய் ஓவர் டைம் பார்த்து மக்களுக்கு சேவை செய்வார்கள்?

banner

’என்னங்க சார் உங்க சட்டம்?..கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம்’ என்கிற பாடல் வரிகள் எங்கோ தூரத்தில் காற்றில் பரவி வந்து முகத்தில் அறைகிறது. சட்டங்கள் சாமான்யர்களுக்கானதாக இல்லை என்பது 23 வயதே ஆன இளம்பெண்ணின் உயிரைக் காவு வாங்கி மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது நிஜம்! தேர்வு எழுதி விட்டு, வீடு திரும்பிய சுபஸ்ரீ.. செல்லும் வழியிலேயே லஞ்சம் வாங்கி, ஜால்ரா போடும் அதிகாரிகளால் பிணமாகி மார்சுவரிக்குள் அடங்கிப் போனாள்… இது குறித்து எழுத்தாளர் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு நம் வாசகர்களுக்காக அப்படியே…

23 வயது இளம் பெண்ணே. சட்டத்தை பற்றி கவலையே படாத அரசியல் வியாதி ஒருவர் சாலை தடுப்பு மேல் வைத்த ஒரு பேனர், உன் தலையில் விழ, நிலைதடுமாறி லாரி அடியில் சிக்கி ரத்தவெள்ளத்தில் இந்த உலகத்தை விட்டு போய் விட்டாய்!

subhasri

இளம் பொறியாளரான நீ போன பின் நாங்கள் என்ன செய்கிறோம். வெட்கமே இல்லாமல் வேடிக்கை பார்க்கிறோம். சும்மா இல்லை, தகவல் மேல் தகவல்களாய் கேட்டு.
பேனர் வைக்க நாங்கள் எப்போதோ தடை விதித்து விட்டோம் என்கின்றன உச்ச, உயர் நீதிமன்றங்கள்!

சென்னை மாநகராட்சியை கேட்டால் நாங்கள் பேனர் வைக்க கொடுப்பதை கடந்த ஆண்டு டிசம்பரிலேயே நிறுத்தி விட்டோம் என்கிறது. காவல் துறையே, அய்யய்யோ பேனர் வைக்க தடையில்லா சான்றிழை ஒரு வருடமாக நாங்கள் வழங்கவேயில்லை என்று கையை விரிக்கிறது! ஆனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் சாலையில் பகிரங்கமாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் பள்ளிக்கரணை அதிமுக நிர்வாகி ஜெயகோபால் என பெயரும் இருக்கிறது. அங்கே ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கோ, அந்த பகுதி மாநராட்சி ஊழியர்களுக்கோ இந்த பேனர்களைப் பார்த்திருக்கிற வாய்ப்பே இல்லை என்று நாங்கள் தமிழ் மண் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு நம்புகிறோம்.

எங்காவது கட்டிட வேலைக்காக ஒரு லோடு மணலும் செங்கல்லும் வந்து இறங்கினாலே, மூக்கு வியர்த்து ஓடோடி வந்து கறக்க வேண்டியதை கறந்து செல்லும் ஊழியர்களை நாங்கள் பார்த்ததேயில்லை. சரி விஷயத்துக்கு வருவோம், பேனர் யார் வைத்தார் என்பது தெரியும். அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பை எந்தெந்த சீட்டில் உள்ள அதிகாரிகள் தவிர்த்தார்கள் என்பதும் தெரியும்.

banner

ஆனாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. நாங்க புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஹெல்மெட் போடாத உலக மகா கொடியவர்களை கொத்து கொத்தாய் பிடித்து அபராதம் விதித்து சட்டத்தை நிலை நாட்டி உயிர்பலிகளை தடுப்போம். ஹெல்மெட்டுக்காக வாளைச் சுழட்டும் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து அதன் பலத்தை. இப்போதாவது காட்டுமா? பரிதாபத்துக்குரிய சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணை கொன்ற கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்க வகை செய்யுமா?

இதெல்லாம் நடக்காவிட்டால் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் சுபஸ்ரீ எங்களை தாராளமாக விண்ணிலிருந்த படியே துப்போ துப்புவென துப்பலாம். இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. விதிமுறைகளை மீறி பேனர்களையும் கொடிக்கம்பங்களையும் சாலைதோறும் வைக்கும் எல்லா மானங்கெட்ட கட்சிகளும் தாம் தூம் என இப்போது குதிக்கும். உண்மையிலேயே அவர்களுக்கு சுரணை இருந்தால், இனி தங்கள் கட்சியில் எவனுமே பேனர் வைக்கக் கூடாது என்று சொல்லவேண்டும். ஆனால் சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் அரசியல் கட்சிகள் அனைத்துமே யோக்கியத்தின் சிகரங்கள்!

-ஏழுமலை வெங்கடசேன்