லஞ்சம் இல்லாத ஒரே கட்சி பாஜக- ரவிசங்கர் பிரசாத்

 

லஞ்சம் இல்லாத ஒரே கட்சி பாஜக- ரவிசங்கர் பிரசாத்

பா.ஜ. க ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ. க ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெகு விரைவில் கேரளவிலும் தமிழகத்திலும் தாமரை மலர்ந்தே தீரும். ஜெய் ஸ்ரீ ராம் என கூறிய மேற்கு வங்க பா க தொண்டர்களை மம்தா காவல்துறையை வைத்து அடக்கு முறையை ஏவியுள்ளார். இப்போது நானும் சொல்கிறேன் ஜெய் ஸ்ரீ ராம் . மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க வை உள் நுழைய விட மாட்டேன் என கூறினார் மம்தா பானர்ஜி. ஆனால் பா.ஜ.க 18 இடங்களை வென்றுள்ளது.

பா.ஜ.க வுக்கு நமது நாடு மட்டுமே பிரதானம் அதன் வளர்ச்சியே பிரதானம், ஆனால் இங்கு சிலருக்கு குடும்பம் மட்டுமே பிரதானம். பா.ஜ. க ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது . காங்கிரஸ் ஆட்சியில் 1 ரூபாய் கொடுத்தால் அடித்தட்டு மக்களுக்கு 15 பைசா தான் வந்து சேரும், பா.ஜ.க ஆட்சியில் 100 ரூபாய் கொடுத்தால் அது அப்படியே மக்களை சென்றடைகிறது. தொலை தொடர்பு துறையிலும் 2G என்ற பெயரில் ஊழல் நடந்துள்ளது” என்று கூறினார்.