‘ரொம்ப பேசுன உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்டுவேன்’: மனைவியின் காதலனை கத்தியால் குத்தியவர் கைது!

 

‘ரொம்ப பேசுன உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்டுவேன்’: மனைவியின் காதலனை கத்தியால் குத்தியவர்  கைது!

மனைவியை அழைத்துச் சென்று விடுவதாகக் கூறிய இளைஞரை பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

‘ரொம்ப பேசுன உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்டுவேன்’: மனைவியின் காதலனை கத்தியால் குத்தியவர்  கைது!

மதுரை : மனைவியை அழைத்துச் சென்று விடுவதாகக் கூறிய இளைஞரை பனியன் நிறுவன தொழிலாளி கத்தியால் குத்திய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த திருச்சுளை பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. ஐவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்களுக்குக் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அப்பெண்ணை திருப்பூர் மாவட்டத்தைச்  சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். திருமணத்திற்குப் பிறகு பிரகாஷ் தனது மனைவியுடன் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் வசித்து வந்தார்.

love

இதையடுத்து கேசவமூர்த்தி சிங்கப்பூருக்கு வேலைக்கு  சென்றுவிட்டார். ஆனால்  அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் முன்னாள் காதலியை சந்தித்து வந்துள்ளார். தற்போது 3 மாத விடுமுறையில் ஊருக்கு வந்த கேசவமூர்த்தி திருப்பூருக்கு வந்து முன்னாள் காதலியின் கணவர் பிரகாஷ் வேலை செய்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இதில் பிரகாஷூக்கும் கேசவ மூர்த்திக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றாக மதுக்குடிக்கும் அளவிற்கு இவர்கள் நட்பு வளர்ந்துள்ளது. 

இந்நிலையில் சம்பவத்தன்று கேசவ மூர்த்தியும், பிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர் மணீஷ்குமார் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று மது குடித்தனர். அப்போது மணீஷ் கேவமூர்த்திக்கும், பிரகாஷின் மனைவிக்கும் உள்ள உறவு பற்றி கூறியுள்ளார். இதனால் கேவனுக்கும் பிரகாஷுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நீ என்னிடம் சண்டை போட்டால் நான் உன் மனைவியை அழைத்து கொண்டு சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 
 பிரகாஷ் தான் வைத்திருந்த கத்தியால் கேசவ மூர்த்தியைச் சரமாரியாகக் குத்தி உள்ளார்.இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கேசவ மூர்த்திக்குத்  திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கேசவ மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.