ரேப் செய்தாரா அமைச்சர் ஜெயக்குமார்? ரகசியங்களை உடைத்த வெற்றிவேல்

 

ரேப் செய்தாரா அமைச்சர் ஜெயக்குமார்? ரகசியங்களை உடைத்த வெற்றிவேல்

ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் வன்புணர்வு செய்ததாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை: ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் வன்புணர்வு செய்ததாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கர்ப்பம் தரித்த இளம்பெண் ஒருவரின் தாயும், அமைச்சர் ஜெயக்குமாரும் செல்ஃபோனில் உரையாடுவது போல் ஒரு ஆடியோ நேற்று வெளியானது.

அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அந்த வீடியோவில் பேசியது நான் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல் கூறுகையில், “மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின் திருமணம் செய்வதாகக் கூறி பல முறை அப்பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த பெண் மட்டுமின்றி, பல பெண்களை அமைச்சர் ஜெயக்குமார் ஏமாற்றியுள்ளார். தொகுதி பெண்கள் மற்றும் பெண் நிருபர்கள் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அந்த குழந்தைக்கோ அல்லது அவரின் தாய்க்கோ ஏதும் பிரச்சனை வரும் பட்சத்தில் அனைத்து ரகசியங்களையும் உடைப்போம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது திண்டுக்கலில் அப்பெண்ணுடன் ஜெயக்குமார் உல்லாசமாக இருந்தார்” என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் பதவியில் இருந்து விலகி, அந்த குழந்தை அவருடையது இல்லை என அவர் நிரூபிக்கட்டும் என்றும் வெற்றிவேல் சவால் விடுத்துள்ளார்.