ரெய்டுக்கு பயந்து தூக்கி வீசப்பட்ட பணக்கட்டுக்கள்! 

 

ரெய்டுக்கு பயந்து தூக்கி வீசப்பட்ட பணக்கட்டுக்கள்! 

மேற்கு வங்க மாநிலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து வீட்டின் மாடியிலிருந்து பணக்கட்டுகள் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Money

கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவுள்ளதாக அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த ஊழியர்கள் ஓனருடைய உத்தரவின் பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 6வது மாடியில் இருந்து வீசியெறிந்தனர். கட்டுக் கட்டாக கீழே விழுந்த பணத்தை கண்ட பொதுமக்கள் அதனை அள்ளிச்சென்றனர். ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. 

மாடியில் இருந்து பணக்கட்டுகள் விழுவதம், அதனை பொதுமக்கள் எடுத்து செல்வதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.