ரெயில்வே வேலை வாய்ப்பெல்லாம் பாஜகவின் மோசடி அறிவிப்பு: ப.சிதம்பரம்

 

ரெயில்வே வேலை வாய்ப்பெல்லாம் பாஜகவின் மோசடி அறிவிப்பு: ப.சிதம்பரம்

ரெயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது பாஜகவின் மற்றொரு மோசடி அறிவிப்பு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை: ரெயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது பாஜகவின் மற்றொரு மோசடி அறிவிப்பு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ரெயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், 2 ஆண்டுகளுக்குள் மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பியு‌ஷ் கோயல் அறிவித்தார்.

இந்நிலையில், பியூஷ் கோயலின் கருத்து குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ரெயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் 2,82,976 பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் தற்போது மத்திய அரசு விழித்துக்கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து உள்ளது. 

இது பாஜக  அரசின் மற்றொரு மோசடி அறிவிப்பு ஆகும். பல்வேறு அரசு துறைகளில் ஏராளமான காலி பணியிடங்கள் இருக்கின்றன. அதே சமயம் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை என பதிவிட்டுள்ளார்.