ரெண்டு நாள் ரெஸ்ட்! திங்கட்கிழமை வெளுத்து வாங்கும் கனமழை! ஒரே நேரத்துல ரெண்டு புயல்!

 

ரெண்டு நாள் ரெஸ்ட்! திங்கட்கிழமை வெளுத்து வாங்கும் கனமழை! ஒரே நேரத்துல ரெண்டு புயல்!

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கனமழை தற்போது விலகியிருக்கிறது. இந்நிலையில், ‘மஹா’ புயல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 4 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கனமழை தற்போது விலகியிருக்கிறது. இந்நிலையில், ‘மஹா’ புயல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 4 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

நாளையும் நாளை மறுதினமும் மழை இருக்காது எனவும், நவம்பர் 4ம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் மஹா புயலின் எதிரொலியாக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தீவிரப் புயலாக தற்போது மஹா புயல் நிலைக்கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மிக தீவிரப் புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் திங்கட்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain

சென்னையிலும் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. தற்போது அரபிக்கடலில் முதன்முறையாக ஒரே நேரத்தில் ‘கியார்’, ‘மகா’ ஆகிய இரண்டு புயல்கள் உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.