ரெக்கமெண்ட்டுக்கு போன இடத்தில் பிரக்னெண்ட்… பாலியல் புகாரில் சிக்கிய தமிழக அமைச்சர்? அதிரவைக்கும் ஆடியோ

 

ரெக்கமெண்ட்டுக்கு போன இடத்தில் பிரக்னெண்ட்… பாலியல் புகாரில் சிக்கிய தமிழக அமைச்சர்? அதிரவைக்கும் ஆடியோ

தமிழக அமைச்சர் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக வெளியாகி இருக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தமிழக அமைச்சர் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக வெளியாகி இருக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெயக்குமார். அவரது கட்சி சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அவரே பத்திரிகையாளர்களிடம் முகத்தை காண்பிப்பார். அவர் மீது தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அது என்னவெனில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த இளம்பெண் சுசிலா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தனது தாயாருடன் ஒரு சிபாரிசுக்காக ஜெயக்குமாரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அப்போது சுசீலாவுடன் நெருக்கமான தொடர்பை அவர் ஏற்படுத்திக்கொண்டதாகவும் அதன் காரணமாக அமைச்சருக்கும் சுசீலாவுக்கும் குழந்தை பிறந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயராக அமைச்சரின் பெயரே இடம்பெற்றுள்ள பிறப்பு சான்றிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

birth

அதுமட்டுமின்றி சுசீலாவின் தாயாரும் அமைச்சரும் உரையாடுவது போன்ற ஆடியோவும் வெளியாகி இருக்கிறது. அதில், நான் சுசீலாவின் தாயார் பேசுகிறேன் எனது மகள் கர்ப்பமாக இருக்கிறார் என அவர் தெரிவிக்க ‘நீ நேர்ல வாம்மா. நாம பேசி தீர்த்துக்கலாம்’ என்கிற ரீதியில் அமைச்சர் கூறுவது போன்ற பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அந்த ஆடியோவில் குழந்தையை கருவிலேயே கலைக்க முடியவில்லையா? என அமைச்சர் சுசீலாவின் தாயாரிடம் கூறுவது போன்ற பேச்சுக்களும் இடம்பெற்றுள்ள.

தமிழக அமைச்சர் ஒருவர் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக வெளியாகி இருக்கும் ஆடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திக்கும் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து இன்னும் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.