ரூ. 8 கோடி மோசடி: தி.மு.க மாவட்டச் செயலாளர் அதிரடி கைது; தொண்டர்கள் அதிர்ச்சி!

 

ரூ. 8 கோடி மோசடி: தி.மு.க மாவட்டச் செயலாளர் அதிரடி கைது; தொண்டர்கள் அதிர்ச்சி!

நிதி மோசடி புகார் தொடர்பாக தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் சிவானந்தம். இவர் கரூரில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ரூ.5 கோடி கடன் பெற்றிருந்தார்.

நிதி மோசடி புகார் தொடர்பாக தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

siva

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் சிவானந்தம். இவர் கரூரில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ரூ.5 கோடி கடன் பெற்றிருந்தார். தொடக்கத்தில் வட்டி கட்டிய சிவானந்தம், பிறகு வட்டி, அசல் என எதையும் செலுத்தவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனம் சிவானந்தத்தை அணுகியபோது எல்லாம், இதோ, அதோ என்று போக்கு காட்டி வந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அந்த நிறுவனம் வட்டி, அசல் எல்லாம் சேர்த்து தற்போது 8 கோடி ரூபாயை சிவானந்தம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சிவானந்தம் மீது திருவண்ணாமலை போலீசில் புகாரும் செய்யப்பட்டது.

siva

இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சிவானந்தத்தை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.