ரூ.75 ஆயிரம் கோடி லாபம் கொடுத்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 223 புள்ளிகள் வீழ்ச்சி…

 

ரூ.75 ஆயிரம் கோடி லாபம் கொடுத்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 223 புள்ளிகள் வீழ்ச்சி…

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 223 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடக்கத்தில் சரிவுடனேயே தொடங்கியது. இருப்பினும் பங்கு வர்த்தகம் பின்னர் ஏற்றம் கண்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிவு கண்டபோதிலும் அது பங்கு வர்த்தகத்தில் பெரிய அளவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைவாக இருந்ததால் முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர் இது பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது.    

என்.டி.பி.சி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்டு டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, நெஸ்லே இந்தியா, பவர்கிரிட், எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக் மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், கோடக்மகிநதிரா வங்கி, இன்போசிஸ் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

 மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,614 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 763 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.120.74 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது. 

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 222.80 புள்ளிகள் உயர்ந்து 30,602.61 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 67.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8,992.80 புள்ளிகளில் முடிவுற்றது.