ரூ.6.50 லட்சம் செலவில் வைக்கப்பட்ட என்.ஜி.கே கட் அவுட் அகற்றம்: சோகத்தில் சூர்யா ரசிகர்கள்

 

ரூ.6.50 லட்சம் செலவில் வைக்கப்பட்ட என்.ஜி.கே கட் அவுட் அகற்றம்: சோகத்தில் சூர்யா ரசிகர்கள்

நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே படத்திற்காக வைத்த கட் அவுட் அகற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே படத்திற்காக வைத்த கட் அவுட் அகற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல் முறையாக செல்வராகவன் -சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்தி உருவாகியுள்ள இதில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு என்று பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பரப்பில் உள்ள இப்படம், வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கி வசூல் சாதனை படைத்தது வருகிறது. 

தொடர்ந்து சூர்யாவின் படங்கள் தோல்வியைத் தழுவி வருவதால், இப்படமாவது வெற்றியடையுமா என்பதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலயில் இந்த படத்தை வரவேற்கும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் இதுவரை யாருக்கும் வைக்காத உயரத்திற்கு கட் அவுட் வைக்க முடிவு செய்தனர். அதன்படி 215அடியில் சூர்யாவுக்கும் பிரேமாண்டமாக கட் அவுட் வைத்து அசத்தியுள்ளார். 

surya

இந்த நிலையில் ரூ.6.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட் அவுட் திடீரென அகற்றப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கட் அவுட்டுக்கு நகராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்போது கட் அவுட் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அனுமதியின்றி கட் அவுட் வைத்தது தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகி ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.