ரூ.500க்குத்தான் உயிரைக் கொடுத்துப் பேசினேன்! – சிஏஏ போராளி பரிதாப வாக்குமூலம்

 

ரூ.500க்குத்தான் உயிரைக் கொடுத்துப் பேசினேன்! – சிஏஏ போராளி பரிதாப வாக்குமூலம்

மேடைகளில் தம் கட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலரும் பேசி வருகின்றனர். அவர்களுள் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வழி பாலமுருகன். இவர் சிஏஏ எதிர்ப்பு மேடைகளில் பா.ஜ.க, மோடி, அமித்ஷாவை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டு வந்தார்.

ரூ.500க்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசியதாக சிஏஏ போராளி அய்யா வழி பாலமுருகன் வீடியோ வெளியிட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேடைகளில் தம் கட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலரும் பேசி வருகின்றனர். அவர்களுள் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வழி பாலமுருகன். இவர் சிஏஏ எதிர்ப்பு மேடைகளில் பா.ஜ.க, மோடி, அமித்ஷாவை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டு வந்தார்.

balamurugan

இந்த நிலையில் கோவையில் நடந்த கூட்டத்தில் மோடி, அமித்ஷாவைப் பற்றி அவதூறாகப் பேசியதாக பாலமுருகன் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு அழைத்த கோவை போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து தான் ஏன் அவ்வாறு பேசினேன் என்பதற்கான விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பாலமுருகன்.

balamu

அதில், மேடையில் பேசினால் ரூ.500 கொடுப்பார்கள். அந்த ரூ.500க்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசியதாக பரிதாபமாக தெரிவித்துள்ளார். போலீசார் மிரட்டல் காரணமாகவே பாலமுருகன் இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார் என்று சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.